தமிழக முதல்வர், மேதகு தமிழ் அறிஞர், தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் வாழ்கையை அர்ப்பணித்தவர், மு கருணாநிதி (Mr.M. Karunanithi)அவர்கள், இப்படிப்பட்ட பெருமைக்குரியவரின் செயல்களில் நிறைகளை மட்டுமே காணும் நண்பர்களுக்காகவும் அன்பர்களுக்காகவும். (இன்று காலை செய்தி தாளை படித்தவுடன் எனக்கு தோன்றியது)
இந்தியாவின் முன்னால் தொடர்வண்டி துறை அமைச்சரும் (Ex. Railway Minister), ஏழு பெண்களுக்கு தந்தையுமான திரு லல்லு பிரசாத் யாதவ் (Mr. Lalu Prasadh Yadhav) அவர்கள் பெண்களுக்கு 33% ( முப்பத்தி மூன்று சதவீத) இடஒதுக்கீட்டை எதிர்த்தும், பிற்படுதப்ப்பட்டோருக்கும் , தலித்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் உள் ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பது இவரின் விருப்பம் ( திரு. முலாயம் சிங்கின் விருப்பமும் கூட).
இது நன்மைக்கோ தீமைக்கோ, ஆனால் இவரின் விருப்பத்திற்கு மாறாக தனது கட்சி அங்கம் வகிக்கும் (ஆதரவு தரும்) மத்திய அரசு தீர்மான மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது, இதனால் மத்திய அரசிற்கு (காங்கிரசிற்கு - Congress) தான் (ராஷ்டிரிய ஜனதா தளம் - RJD) கொடுக்கும் ஆதரவை விளக்கி கொள்ளப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். இதில் உயிர் போகும் அளவிற்கு எதுவும் பெரிதாக நடந்துவிடவில்லை, இந்த மசோதாவால் பெரிய மாற்றம் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை (நிகழ்ந்தால் நன்மைக்கே) ஆனால் இந்த ஒரு மத்திய அரசின் தீர்மானத்திற்கே அவர் மத்திய அரசிடம் இருந்து ஆதரவை திரும்ப பெற்றுக்கொள்கிறார்.
ஆனால் பல லட்சக்கணக்கான தமிழர்களை கொல்ல ஆயுதம் வழங்கிய, பல லட்சம்
தமிழர்கள் உயிர்கள் காவு வாங்க காரணமாய் இருந்த மத்திய (இந்தியாவை ஆளும் காங்கிரஸ்) அரசிற்கு தான் கொடுக்கும் (தி.மு.க) அதரவை விளக்கி கொள்ள தயாரில்லை, இதை கேட்கப்போனால், மத்திய அரசின் செயல்பாட்டில் (மத்திய மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் தி.மு.க.) தமிழக அரசு ஒன்றும் செய்ய முடியாது, தன்னால் கடிதம் ஒன்றை மட்டுமே எழுத முடியம் என்றார். இது வேடிக்கையான, கேவலமான ஒரு நிகழ்வு.
இங்கே இன உணர்வு மிஞ்சியதா? மாண உணர்வு மிஞ்சியதா? கொள்கையுணர்வு மிஞ்சியதா? பாச உணர்வு மிஞ்சியதா? சுயநலம் மிஞ்சியதா?
என்னை பொறுத்தவரை தமிழனை விட பீகாரியே தைரியம் உள்ளவனாகவும், கொள்கை பிடிப்பு உள்ளவனாகவும், பதவி ஆசைக்கு அப்பாற்பட்டவனாகவும் இருக்கிறான்.
தமிழன் வீரம் இல்லாதவனாக மாற்றப்பட்டுள்ளான், சாதிபிரசினைக்காக ஆயுதம் எடுக்க துணிந்தவன், புத்தி என்னும் ஆயுதத்தை எடுக்கவும், ஒட்டு என்னும் கேடயத்தை பயன் படுத்தவும் மறந்து விட்டான், வெறும் ஐநூறு ஆயிரத்திற்காக தன் வாழ்க்கையையே துளைத்துவிடான், தன் சொந்தங்களின் சோகத்தை மறந்துவிட்டான்.
இங்கே இன உணர்வு மிஞ்சியிருந்தால், நம் சொந்தங்களை கொள்ளப்பணித்தவனுக்கு வெற்றி கிடைத்திருக்குமா?